Monday 26 December 2022

கருங்காலி மாலை

#கருங்காலி_மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோமா?

* ஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, கருங்காலி மாலை.

* இந்த கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளும் பொழுது நம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும்.

* நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும்.

* சகோதர் பிரச்சனைகள் சரியாகும் கணவன் மனைவி பிரச்சனை இருப்பின் பிரச்சனை நீங்கி கணவன் மனைவி உறவு மேம்படும். இல்லறம் நல்லறமாக அமைய அனைவரும் அணிந்து பயன்பெறுவோமாக. இவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் நமக்கு கிடைக்கும்.

* நம்மை சுற்றி உள்ள பில்லி, சூனியம், ஏவல் இதுபோன்ற கெட்ட சக்திகள் நம்மை நெருங்காது.

* மந்திர ஜபம் செய்ய சிறந்த மாலையாகும். துர்கை, காளி, வாராஹி, பைரவர் போன்ற தெய்வங்களின் அருள் பெற இந்த மாலையைக் கொண்டு ஜபம் செய்ய பலன் நிச்சயம் கிடைக்கும்.

* ஆண்,பெண் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பேறுக்கு வழி வகுக்கும். உடலில் சோம்பல் நீங்கி சுறு சுறுப்பு உண்டாகும். மேலும் மாங்கல்ய பலத்தை பலப்படுத்தும் ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.

* வியாபார தொழில் போட்டிகளில் 
வெற்றி கிட்டும். நிலம் சம்மந்த பட்ட தொழில் செய்பவர்கள் இதை அணிந்து கொள்ள அத்துறையில் வெற்றி வாகை சூடலாம்.

* கோபங்கள் சிறிது சிறிதாக குறையும். 
நம் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும். பேச்சுதிறமை அதிகரிக்கும்
தேவைப்படுவோர் தொடர்புக்கு -9962666019

Tuesday 13 December 2022

ரசமணிகள்



ரசமணி என்பதை பற்றி தெரிந்து கொள்ளும் முன்னர் 
பாதரசம் எனும் உலோகத்தை
  " பற்றி " அறிந்துக் கொள்வது
நலம் ஆகும்...

பூமாதேவியின் கற்பத்தில் உற்பத்தியாகும் தாதுக்களில் இருந்து கிடைக்கும் உலோகங்களில் மிக உன்னதமான உலோகம் பாதரசம் ஆகும்.

இது பூமியிலிருந்து கிடைக்கும்
 " லிங்கம் " எனும் தாது உப்பில் மறைந்து கலந்து உள்ளதே 
சுக்கில ரசம் ஆகும். 

இந்த ரசமானது மற்ற உலோகங்களை விட
 மிக மிக குறைந்த வெப்பத்தில் உருகு நிலையை அடையக்கூடிய தன்மை கொண்டது ஆகும்.

குறைந்த வெப்பநிலையில் உருகி   திரவ நிலையில் உள்ள பாதரசத்தை
குறிப்பிட்ட சில சூட்சும வழிமுறைகள் மூலம்  திட நிலைக்கு கொண்டுவந்து
மணியாக செய்து அணிவது
காய சித்திக்கும்  , 
ஆன்ம மேம்படலுக்கும், 
ஆன்மிக சாதனைகள் புரியவும்    மிக்க நலமென சித்தர்களும் , முநிகளும் , ரிஷிகளும் , மஹாபுருஷர்களும் 
பல்வித கிரந்தங்களில் குறிப்பிட்டுள்ளனர் 

தங்கம் , வெள்ளி  , தாமிரம் முதலான அனைத்து உலோகங்களை விடவும் , நவரத்தினங்கள் , உபரத்தினங்கள் , 
விருட்ச உபகரணங்கள் ஆகியவற்றை விடவும் 
மிக அதிகஅளவில் 
பிரபஞ்ச பேராற்றலை 
உள்வாங்கி சேமித்து வைத்து தேவைக்கேற்ப வெளிபடுத்தவல்லது பாதரசம் ஆகும்.

மேன்மை மிக்க பாதரசத்தை 
மந்திர , தந்திர , யந்திர , ஜோதிஷ , வாஸ்து , ஆகம , சில்ப , சகுன ,. 
சஸ்திர , அஸ்திர  விதிகளுக்கு உட்பட்டு 
பல்வித உபாயங்களில் பயன்படுத்தலாம்..

முற்பிறவி  கர்ம வினைகளின் 
கட்டு மட்டுப்படவும் ,..

பித்ரு , மாத்ரு , பசு , விருட்ச , சர்ப, பூத , பிரேத முதலான இன்னபிற இனமறியா சாபங்களின் வீரியத்தை குறைக்கவும்..

 கர்த்தாவின்  ஜாதகத்தை ஆராய்ந்து 
அதற்கான பிரத்யேக வழிமுறையில் ரசவாத பிரயோகம் செய்து உபயோகப்படுத்தினால்

கர்த்தாவானவன் விரும்பும் இலக்கை அடைய தேவையான பிரபஞ்ச சக்தியை ஏற்படுத்தி கொடுக்கும் என்பது நிதர்சனம்,...

மேலும் விபரங்கள் அறிய  தேவைப்படும் நபர்கள் தொடர்பு கொள்ளவும்
Dr.s. vasantharaj -BAJM,LLB,DCA,DTC,JAP,GS,Gem&Num
9962666019
அழைக்கவும்.
.
.

Friday 18 November 2022

170 காரட் எடையுடன் பூமியின் மிக அரிய வகை வைரம் கண்டுபிடிப்பு.!

இந்த பிங்க் நிற லுலோ ரோஸ் வைரம் சுமார் 170 காரட் எடையுடன், ஆப்பிரிக்கா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள லுலோ சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அரிய மற்றும் மிகப்பெரிய பிங்க் நிற வைரம் இதுவாகும். லூகாபா வைர நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சுரங்கத்தில் இருந்து இது கண்டுபிடிக்கபட்டுள்ளது

Friday 28 October 2022

ஜம்பொன் காப்பு

ஐம்பொன்னை கொண்டு கைகளுக்கு மோதிரமாகவோ ,காப்பாகவோ மற்றும் வேறுபல ஆபரணங்களாகவோ செய்து உடலில் அணிந்தால் உடலின் வெப்பம் சமமாக
 வைக்கும்,உடலினை குளிர்ச்சி படுத்தும்,ராஜ உறுப்புகளான இதயம் ,மூளை,நுரையீரல் ,சிறுநீரகம்,கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் ,இரத்தத்தை சுத்தப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும் ,இதன் அறிவியல் விளக்கத்தை காண்போம்
மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுபடுத்தும் தன்மை கொண்டுள்ளது,மேலும் நம்முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து இராஜ உறுப்புகளுக்கு கடத்துக்கிறது.
இந்த பகுதிகளில் ஐம்பொன்பொன்னால் ஆன மோதிரங்கள் அல்லது காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தி எடுத்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணி இந்த முக்கிய நரப்பு புள்ளிகள் வழியாக அனுப்பி நம்முடைய ராஜ உறுப்புகளை செழுமையாக இயங்க செய்யும்

பஞ்சலோகம் காப்பு கிடைக்கும்
பஞ்சலோகம் என்றால் ஐந்து வகை உலோகம்.
தங்கம் , வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம்.

இதில் தங்கம் குருவின் சக்தியையும்,

வெள்ளி சுக்ரனின் சக்தியையும் ,

செம்பு சூரியனின் சக்தியையும்,

இரும்பு சனியின் சக்தியையும்,

ஈயம் கேதுவின் சக்தியையும்.

ஐந்து உலோகங்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை புரிகின்றன.

நமது உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும், உடலில் அணியும் போது ஐம்பொன்  உலோக காப்பு  உடலில் உள்ள நரம்பு மூலம் ராஜ உறுப்புகளுக்கு பிரபஞ்ச சக்திகளையும், ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி,ஞான சக்தி, ஆண்மை சக்தியையும் பெற ஐம்பொன் உலோகம்  காப்பு அணிவதன் மூலம் பெறிதும் துணை புரிகிறது.

நமது உடலில் உள்ள ஐம்புலன்களையும் சரிவர இயங்கச் செய்யும் வல்லமை படைத்தது.

வழிபாட்டின் மந்திர அதிர்வுகளையும், ஐந்து உலோக சக்தியையும் உடலில் வாங்கும்போது ,சிந்தனை மேலோங்கும் மனம் சாந்தம்,உடல்சுறு சுறுப்பு அடைகிறது. நமது ஆன்மீக பெரியோர்களும் ,சித்தர்களும் அறிந்தே பல நூற்றாண்டு முன்னரே பயன் படுத்தி உள்ளனர் என்பது தெரிந்த ஒன்றே.

பொதுவாக அனைவரும் தங்கம் ,வெள்ளியில் நகைகள் அணிவது தான்வழக்கம்.

இதிலுள்ள உட்கருத்துக்கள் என்னவெனில் அந்த உலோகத்தின் சத்துக்கள்,சக்திகள் நம் உடலுக்கு கிடைக்கட்டும் என்பதுதான்...
இது மட்டும் போதுமா..
பஞ்சலோகத்தில் நகைகள் அணிந்தால் அது உடலுக்கு பெரும் பயனளிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட  மணிக்கட்டு 

இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து இராஜ உறுப்புகளுக்கு கடத்துக்கிறது.

ஐம்பொன்னால் ஆன  காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை எடுத்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணி.

இந்த முக்கிய நரப்பு புள்ளிகள் வழியாக அனுப்பி நம்முடைய ராஜ உறுப்புகளை செழுமையாக இயங்க செய்யும் .இராஜ உறுப்புகளான இதயம் ,

மூளை ,நுரையீரல்,சிறுநீரகம்,கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும். இரத்த கொதிப்பை சீராக்கும்.
கைவலி மற்றும் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

நரம்பு சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

Friday 21 January 2022

இரிடியம் என்றால் என்ன?

தற்காலத்தில் அதிகமானவர்களால் தேடப்படும் விலைமதிப்பான பொருளான #இருடியம் பற்றிய குறிப்புகள் அதன் விளக்கமும்.

 இரிடியம் என்ற தனி உலோகம் மிகவும் அரிதானது. வருடத்திற்கே மூன்று டன் தான் வெட்டி எடுக்கிறார்கள். 1803-ம் ஆண்டு இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்மித்சன் டென்னண்டால் இந்த உலோகம் கண்டுபிடிக்கப்பட்டது. மிக அதிக அளவிலான உஷ்ணத்தை தாங்கக்கூடிய கதிரியக்கம் கூடிய அபூர்வ  உலோகம்.

இதன் உருகுநிலை 2466 ° செல்சியஸ் (39 டிகிரி செல்சியஸ் 100 டிகிரி பாரன் ஹீட்டுக்கு சமம்) என்ற உயர்ந்த அளவில் இருப்பதால், இது உயர் வெப்பநிலையில் இயங்க வேண்டியிருக்கும் கருவிகளில் பயன்படுகின்றது. இரிடியம் இயற்கையில் பிளாட்டினம், அசுமியம் ஆகியவற்றுடன் சேர்ந்த கலவையாகக் கிடைக்கின்றது. இது அதிகம் அரிதான பொருட்களில் ஒன்று.

ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நில உருண்டையின் மீது ஒரு பெரிய விண்கல் வந்து மோதியதாகவும் அந்த விண்கல்லில் இந்த இரிடியம் கூடுதலான விகிதத்தில் இருந்ததாகவும் கருதப்படுகின்றது. லத்தீன் மொழியில் இதற்கு வானவில் என்ற அர்த்தம் உண்டு.

எங்கு கிடைக்கிறது? 
அதன் தன்மை என்ன?

இந்த இரிடியம் எளிதாக பூமியில் கிடைப்பதில்லை. பிளாட்டினம் கிடைத்தாலும், அதில் 1000-ல் ஒரு பங்கு மட்டுமே இரிடியம் கிடைக்கிறது. ஆண்டுக்கு 3 டன்கள் மட்டுமே இரிடியம் பூமியிலிருந்து எடுக்கப்படுகிறது.

இதனால், கிடைப்பதற்கரிய இரிடியத்துக்கு கள்ளச் சந்தையில் அமோக வரவேற்பு பல்லாயிரம் கோடிக்கு  இருக்கிறது. தாமிர கனிமத்திலிருந்தும் இந்த இரிடியம் கிடைக்கிறது. பல நூறு ஆண்டுகள் பழைமையான தாமிரத்தில், இரிடியம் கலந்திருக்கிறது.

இவற்றை உருக்கும்போது, 361 டிகிரி பாரன்ஹீட்டுக்கு தாமிரம் பிரியும். அடுத்து 2,645 டிகிரி பாரன்ஹீட்டில் நிக்கல் பிரியும். மீதமிருப்பவை இரிடியம் மட்டுமே. இவ்வாறு உருக்கப்பட்டு, சேகரிக்கப்படும் இரிடியம், உள்நாட்டு தேவைக்கும், வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. இதன் மூலம் பல ஆயிரம்   கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டுகின்றனர். இதற்காக உள்ளூர் முதல் உலக அளவில் பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது.

இதன் மதிப்பு எவ்வளவு? 
எதற்கு பயன்படுத்துகிறார்கள்?

ஒரு கிலோ இரிடியத்துக்கு கள்ளச் சந்தையில் கிடைக்கும் விலை சுமார் ரூ.500 கோடிக்கும்  மேல். இரிடியத்தை 4,471 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் மட்டுமே உருக்க முடியும். அவ்வளவு கடினமான வெப்பத்தையும் தாங்கும் திறன் இதற்கு உண்டு.

தொடக்கத்தில் பேனா முனைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது செயற்கைக் கோள்களின் வெளிப்புறத்தில் இந்த இரிடியம் கனிமம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், மருத்துவ உபகரணங்கள், எலக்ட்ரானிக் இயந்திரங்கள், போர் விமானங்களின் என்ஜின் பாகங்களில் கலப்பது எனப் பல்வேறு பயன்பாடுகளுக்கு இரிடியம் பயன்படுகிறது.

இப்படி சக்தி கொண்ட  அரிதான உலோகத்தை எப்படி மோசடிக்கு பயன்படுத்துகிறார்கள்?

அரிதான எந்த பொருளுக்கும் எப்போதும் கிராக்கி உண்டு. அதனுடன் மக்களின் நம்பிக்கையை இணைத்து ஆசையை தூண்டினால், அங்குதான் பிறக்கிறது இரிடியம் மோசடி. சதுரங்க வேட்டை என்ற தமிழ்ப் படம் ஒன்றில் இதை அழகாக கூறியிருப்பார்கள். மனிதன் ஆசையில் தான் மோசடி பேர்வழிகளே உருவாகிறார்கள்.

அரிதான இந்த உலோகத்துக்கு ஆன்மீக துறையில்  பணம் படைத்தவர்களை, விஐபிக்களை மோசடி கும்பல் எளிதாக ஏமாற்றி விடுகிறது. எப்படி ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார்கள் பார்ப்போம்.

பல்லாயிரம் வருடம் பழமையான கோயில்களில் உள்ள  கலசங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் இடி மின்னல் போன்ற காலநிலை மாற்றங்களின் போது பல இரசாயன மாற்றங்கள் நடைபெற்று  ஒருவித சக்தி உற்பத்தியாகிறது.  இதனால் தான்  கோபுரகலசத்தின் நீர் பாவங்களை போக்கும் நன்மை தரும், நோய் தீர்க்கும் என்றெல்லாம் கூறப்படுகிறது வேதங்களில்....

இது தவிர பண்டைய காலத்தில் கோவிலில் அமைக்கப்பட்ட கலசங்களில் இருடியம் தாமிரம் கலந்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கலசங்களை குறி வைத்தும் மோசடி கும்பல் இன்றும் இயங்குகிறது. தமிழக கோயில்களில் திருடப்படும் கலசங்கள், அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, இரிடியம் சோதனைக்கு உட்படுத்துகின்றனர். அதில் இருக்கும் இரிடியத்தின் சதவீதத்துக்கு ஏற்ப கலசத்துக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த நம்பிக்கையை மோசடி பேர்வழிகள் பயன்படுத்தி காசு பார்க்கின்றனர்?

கோவிலில் ஆயிரக்கணக்கான முறை உச்சரிக்கிற மந்திரங்கள் மிகப்பெரிய சக்தியாக மாறி கோவில் கலசத்தை அடையும். இப்படிப்பட்ட சக்தி கொண்ட கலசத்தை லட்சக்கணக்கான வோல்டேஜ் சக்திக் கொண்ட இடி மின்னல் தாக்கும் போது அதன் சக்தி உச்சம் பெறும்.

அப்போது அது இரிடியமாக மாறுகிறது. அப்படி மாறிய சக்தி மிக்க கலசத்தை, அல்லது அந்த தகட்டை வைத்திருக்கிறவர்கள் மிகப்பெரிய வசதி, தேக ஆரோக்கியம் , நாட்டையே ஆளும் வல்லமை கிடைக்கும் என்ற நம்பிக்கை, நினைத்தது நடக்கும் என்ற எண்ணம் இன்று வரை பல இடங்களில் நம்பப்படுகிறது.

சதுரங்க வேட்டை என்ற படத்தில் இந்த மோசடி பற்றி விரிவாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

இது போன்ற எத்தனையோ பொக்கிஷ ரகசியங்களை இந்த பூமி இன்றும் மறைத்து வைத்துள்ளது. காலம் தான் அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில்.....

Sunday 9 January 2022

நாடிகள் பத்தும் நவரத்தினங்கள் ஓன்பதும்


  1. நேரம் -மாணிக்கம்
  2. வழி-முத்து
  3. செய்கை-கோமேதகம்
  4. உறுப்பு-வைடூரியம்
  5. எடுப்பு-வைரம்
  6. இனம்-புஷ்பராகம்
  7. மாத்திரை-மரகதப்பச்சை
  8. இடைவெளி-நீலம்
  9. அமைப்பு-பவளம்
  10. விரிவு-நவரத்தினம்

நவதாளமும் நவரத்தினமும்

  1. அரிதாளம் ,-வைரம்
  2.  அருமதாளம் -மாணிக்கம்
  3. சமதாளம் -மரகதபச்சை
  4. சயதாளம் -முத்து, 
  5. சித்திரதாளம் -புஷ்பராகம்
  6. துருவதாளம் ,-கோமேதகம் 
  7. நிவிர்த்தாளம்-பவளம்
  8. படிமதாளம்-வைடூரியம்
  9. விடதாளம்-நீலம்