Monday 25 February 2019

ஹைதராபாத் நிஜாமின் தங்க டிபன் பாக்ஸ்


தாமிரபாத்திரத்தில் நீர் அருந்தினால் எதிர்ப்பு சக்தி பெருகுகிறதா?

தாமிரம் நீரிழிவிற்கு உதவுகிறதா?

https://tamil.boldsky.com/health/wellness/2018/benefits-of-gold-silver-copper-utensils-health-022354.htmlhttps://tamil.boldsky.com/health/wellness/2018/benefits-of-gold-silver-copper-utensils-health-022354.html

ஆயுர்வேதத்தில் தாமிரம்!

https://tamil.boldsky.com/health/wellness/2018/benefits-of-gold-silver-copper-utensils-health-022354.html

தங்கம் இதயத்தை வலுப்படுத்துகிறதா?

https://tamil.boldsky.com/health/wellness/2018/benefits-of-gold-silver-copper-utensils-health-022354.html

தங்கமே இளமைக்கு!

https://tamil.boldsky.com/health/wellness/2018/benefits-of-gold-silver-copper-utensils-health-022354.html

கிருமிகளை கொள்ளுவதில் வெள்ளியின் பங்கு

https://tamil.boldsky.com/health/wellness/2018/benefits-of-gold-silver-copper-utensils-health-022354.html

ஆரோக்கியமான வயிற்றுக்கு வெள்ளியே

தங்கமும் கிளியோபாட்ராவும்

தங்கம் வெள்ளி பாத்திரங்கள் பருகும் நீரே விலை உயர்ந்த நீர்

விலை உயர்ந்த நீர் இதுவே..!
எந்த ஒரு பொருள் நமது உடலுக்கு அதிக நன்மையை தருகிறதோ அதுவே அதிக விலை உயர்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் நமது உயிரை விட எதுவும் பெரிதானதாக இந்த உலகில் இல்லை என்பதே நிதர்சனம். அந்த வகையில் தங்கம், வெள்ளி மற்றும் தாமிர பாத்திரங்களில் நீர் குடித்தால் அது உடலில் எந்த ஒரு நோயும் அண்டாமல் தடுக்கும். அதனால்தான், இதனை விலையுயர்ந்த நீராக கருதுகின்றனர்.

வெள்ளியும் தாமிரமும்!

எவ்வாறு தங்கம் உடலுக்கு நலனை தருகிறதோ அதே போன்று தான் இந்த வெள்ளியும். பல ஆயுர்வேத மருத்துவத்தில் வெள்ளி மற்றும் தாமிர பொருட்களையே பெரிதும் பயண்படுத்துவர் இது உடலுக்கு நல்ல விதமான ஆற்றலையும் சூழலையும் தரும் அந்த காலத்து மன்னர்கள் கூட எப்போதும் இந்த விலைஉயர்ந்த தங்க வெள்ளி பாத்திரங்களிளே

தங்கத்தால் ஆன சாப்பாடு!

ஐதராபாத்தில் திருமண சாப்பாட்டு பந்தியின் போது தங்கத்தில் உணவு தயாாித்து சமயைல் கலைஞா் ஒருவா் சாதனை படைத்துள்ளாா்.
ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமணத்தில் 24 கேரட் மதிப்பிலான தங்க சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, திருமணத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்களின் சாப்பாட்டு இலையில் தங்கத்தால் செய்யப்பட்ட இலையினை வைக்கும் போது உருகிவிடுகிறது.

இந்த தங்கமானது, செரிமானப் பகுதியில் உறிஞ்சப்படாததால் சாப்பிடுவதற்கு சுவையற்றது மற்றும் தீங்கில்லாததாகும். இது வழக்கமான விலையை விட ரூ.250 முதல் 300 வரை அதிகமாகும்.
தங்க நிற இலைகள் மற்றும் வெள்ளி இலைகளில் போா்த்தப்பட்ட இனிப்புகளை மக்கள் சாப்பிட்டு வருகின்றனர். அப்படியிருக்கையில், நான் அதனை தங்க நிற அரிசியாக மாற்ற முயற்சித்தேன், தங்க இலையை சூடான வேகவைத்த சாப்பாட்டின் மீது வைத்தால் உருகும் என்பதால் இதனை முயற்சித்தேன், தற்போது இது நன்றாக வேலை செய்கிறது என இதனை தயாரித்த சமையற் கலைஞர் சாய் ராதா ​ கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.https://youtu.be/7qOIYyAZZJE

Thursday 21 February 2019

70கிலோ கிராம் எடையுள்ள மனித உடலும் அதில் உள்ள 58தனிமங்களும்

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலும் அதில் உள்ள மூலப் பொருளும் 58 தனிமங்களும்
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.
மேலும் நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன!!

Monday 18 February 2019

யார் வேண்டுமானாலும் அணியலாம் படிகமாலை

ஸ்படிகம் என்றால் என்ன?

  பல நுறு  வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து. அதில் தான் ஸ்படிக மாலை, ஸ்படிக லிங்கம் செய்வார்கள். ஸ்படிக லிங்கம் வைத்து வழிபடுவதனால் நம்மைச் சுற்றி உள்ளவர்களின் எதிர்மறை எண்ணங்களை ஸ்படிக லிங்கம் தன்பால் ஈர்த்துக் கொள்ளும்.

 ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் அறிவியல் ரீதியான பலன்கள்.

1] ஸ்படிக மாலை அணிவது. நமது உடலில் அதீதமாக உள்ள சூட்டை கட்டுபடுத்தும்.  ஸ்படிக மாலை. நமது உடலில் சரியான அளவில் உள்ள சூட்டை குறைக்காது.  உடல் சூட்டை  சீரான. சரியான அளவில் சீராக்கும்.

 2] மனித மனம் ஆல்பா, பீட்டா என்று இரண்டு நிலைகளில் இருக்கும். இன்று பெரும்பாலான மனித மனம் பீட்டா நிலையிலேயே இருக்கிறது. மனித மனம் ஆல்பா நிலையில் இருந்தால் தான் அமைதியாக இருக்கும். ஸ்படிக மாலை. நமது மனதை. அலை பாயும் பீட்டா நிலையில் இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு  அழைத்து செல்லும். ரத்த  கொதிப்பு உள்ளவர்களுக்கு. ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.

 நமது உடல்  சூடு, உள்ள சூடு இரண்டையும் தணிக்கும் ஆற்றல் ஸ்படிகதிர்க்கு  இணையாக. வேறு எதற்க்கும்  இல்லை.

 ஸ்படிக மாலை குறித்து கேட்கப்படும் கேள்விகள்.
ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு? கண்டறிவது.

ஸ்படிக மாலையில் மொத்தம் பத்து விதமான Quality இருக்குங்க. ஸ்படிக மாலையில் நீங்க கை வெக்கறீங்கனா. வெச்சவுடன். நீங்க ஒரு வித குளிர்ச்சியை உணர்வீர்கள். உணர்ந்தால். அது நல்ல உயர் தரமானது.

தெய்வ  பக்த்தி  உள்ளவர்கள்.  108 மணிகள் உடைய ஸ்படிக மாலையை கையில் வெய்த்து.  உங்களுக்கு பிடித்த இறைவனின்  பெயரை. கிடைக்கும் நேரத்திற்க்கு  தகுந்தார் போல். ஜெபம் செய்யலாம்.

 அதை தவிர்த்து. இறை நம்பிக்கை உடையவர்கள், இல்லாதவர்கள் இருவருமே.  அதி காலையில் எழுந்து. மொட்டை மாடி போன்ற ஒப்பன் ச்பேச்சில். உங்கள் லட்சியம் என்னவோ. அதையே. திரும்ப, திரும்ப சொல்லி. மொட்டை மாடியில். ஜெபம் போல் ஸ்படிக மலையை வெய்த்து செய்யுங்கள்.

 நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் மனம் ஒருநிலைப்பட  வேண்டும்.  அமைதியான அதிகாலை வேளை  தான் மனதை ஒரு நிலை படுத்த சரியான நேரம். பிரும்ம முகூர்த்தம் எனப்படும் மூன்றிலிருந்து ஐந்து.

 இதை நீங்கள் சும்மா. முயற்ச்சி  செய்து பாருங்க. உங்களுடைய ஆசை நியாயமான ஆசையாக இருந்தும். அது நிறைவேற கால தாமதம் ஆனால். இவ்வாறு செய்வது. அதன் கால தாமத்தை குறைக்கும். முக்கியமாக. இதன்மூலம் உங்களுடைய நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.

 ஸ்படிக மாலை அணைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டு கொள்ளலாம். முக்கியமாக நீங்கள் குளிக்கும் பொழுது. கழுத்தில் ஸ்படிக மலையோடு குளிப்பது நல்லது.

 1]ஸ்படிக மாலை  அணிவதர்க்கு  என்று ஏதேனும் அடிப்படை  தகுதிகள் இருக்கிறதா?.
2] ஸ்படிக மாலை அணிவதற்க்கு . ஏதேனும் ஆச்சார. அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டுமா?
3] ஸ்படிக மாலை அணிவோர்கள். அசைவம் சாப்பிட கூடாதா.
4] ஸ்படிக மாலை பெண்கள் அணியலாமா?
5] ஸ்படிக மாலையில் எவ்வளவு? விதமான தரங்கள் உள்ளது
6] ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு கண்டறிவது.

 ஏற்கனவே.  மேலே குறிப்பிட்டதை போல். அன்று. மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்க்காக. சித்த  புருஷர்களும், ரிஷிகளும் அறிவியலை. ஆன்மீகம் என்னும் தேனில் கலந்து கொடுத்தார்கள். அது போலவே ஸ்படிகம். பின்னால் வந்த. குறுக்கு புத்தி உடைய சில சாமானிய மக்கள். ஸ்படிக மாலை. இன்னார், இன்னார் அணியலாம். ஸ்படிக மாலை அணிய. இன்ன, இன்ன விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று. அவர்கள் இஷ்டத்திற்க்கு  மனதில் தோன்றியவைகளை எழுதி வெய்த்து விட்டு சென்று விட்டார்கள்.

 அறிவியல் ரீதியாக. ஸ்படிகம். சிறுவர் முதல் பெரியவர் வரை. ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

 காற்று, சூரியன், சந்திரன், நீர் என்று. இறைவனின் அணைத்து படைப்புகளும் அனைவருக்கும் பொதுவானது தானே. நீர் அனைவர்க்கும் பொதுவானது என்றால். நீர் பாறையில் இருந்து கிடைக்கும் ஸ்படிகம் மட்டும் எவ்வாறு? ஹிந்துக்களுக்கு மட்டும். உரிய ஒன்றாக ஆகும். நாஸ்திகர்கள் உட்பட. இதை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

பிளாட்டினம் பூமியாக மாறுகிறது தமிழகம்

சொர்க்க வாசல் திறக்கிறது.  பிளாட்டினம் பூமியாக மாறுகிறது தமிழகம்.  ( விலை மதிப்பற்ற தகவல் ) - தேங்க்ஸ் INDIAN CONSTITUTION - THIS IS A SHARED INFO FROM INDIAN CONSTITUTION.

பிளாட்டினம் பூமி - பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்!
விரைவில் புதிய சுரங்கம் ஏலம்..
தமிழகத்தில், விலை உயர்ந்த பிளாட்டினம் உலோகம் கிடைக்கும் இடத்தை, மத்திய அரசு கண்டறிந்துள்ளது. அந்தச் சுரங்கம் உட்பட, பல உலோகங்கள் கிடைக்கும், ஐந்து சுரங்கங்கள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளன.
இந்திய நில அளவை துறையினர், தமிழகத்தின் பல இடங்களில், பூமிக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தங்கத்தை விட பன்மடங்கு விலை உயர்வான பிளாட்டினம் என்ற உலோக பொருள் படிமங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
துறைப்பாடியில்..இதுகுறித்து, இந்திய நில அளவை துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 10 புதிய கனிம சுரங்கங்களை கண்டறிந்து, மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இதில், * திருவண்ணாமலை மாவட்டம், துறைப்பாடியில், 110 மீட்டர் ஆழத்தில் பிளாட்டினம் இருப்பது தெரியவந்துள்ளது
* திருப்பூர் மாவட்டம், திருமாங்காரடு பகுதியில், இரும்புக்கல்
* ராசிபுரம் அருகே சாம்பல்பட்டியில், அரிய வகை உலோகம்
* திருச்செங்கோடு, சங்ககிரியில், கிரானைட்
* நாமக்கல்லில், 'நிக்கல், குரோமியம், மேக்னசைட்' தாதுக்கள் கிடைப்பதை கண்டறிந்தோம். இந்த, ஐந்து சுரங்கங்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதனால், அவற்றை ஏலத்தில் விடும்படி, தமிழக அரசுக்கு மத்திய அரசு தகவல் தெரிவிக்கும். நாமக்கல் மாவட்டம், சித்தம்பூண்டியில் பிளாட்டினம் கிடைத்தாலும், மேற்கண்ட இடங்களில், தலா, 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் கனிமங்கள் கிடைப்பதால், அவை முதலில் ஏலம் விடப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
'தமிழகத்தில், 10 சுரங்கங்கள் உட்பட, நாட்டில், 100 சுரங்கங்கள் விரைவில் ஏலம் விடப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அது பற்றி, தமிழக சுரங்கம் மற்றும் புவியியல் துறை அதிகாரிகளை கேட்ட போது அவர்கள் கூறியதாவது: 'லீஸ்' கிடையாது:இங்கு, 'மாலிப்டினம்' என்ற உலோகம் கிடைப்பதும் உறுதியாகிஉள்ளது. ஆனால், எந்த உலோக சுரங்கங்களை ஏலம் விடுவது என்பது பற்றி மத்திய அரசு தான் முடிவு செய்யும். இதுவரை, நாம், 'லீஸ்' அடிப்படையில் சுரங்கங்களை கொடுத்து வந்தோம். இனி, அந்த நடைமுறை இருக்காது.
கடந்த, 2015ல் திருத்தப்பட்ட சுரங்கம் மற்றும் கனிம
சட்டப்படி, இனி கனிம சுரங்கங்களை, ஏலத்தில் மட்டுமே விட வேண்டும். ஆனால், ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசுக்குத் தான் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பயன் என்ன? :பிளாட்டினம், தங்கத்தை விட பன்மடங்கு விலை உயர்ந்தது. இது, 'வெள்ளை தங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. இதை எந்த வடிவத்திலும் வார்க்க முடியும். கோடீஸ்வரர்கள், திரையுலக நட்சத்திரங்கள், 'மாடலிங்' மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்கள், தங்கத்தைக் காட்டிலும் பிளாட்டி னம் பயன்படுத்துவதையே விரும்பு கின்றனர்.
ஆபரணங்கள் தயாரிப்பு தவிர்த்து, ரசாயன ஆலைகள், மருத்துவம், பல் மருத்துவம், 'ஏரோஸ்பேஸ்' உள்ளிட்ட பல துறைகளிலும், பிளாட்டினம் பயன்படுத்தப்படுகிறது.

நவரத்தினபட்டு

கஷ்டப்"பட்டு".

2007 ஆம் ஆண்டு சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் தங்களுடைய காஞ்சிபுரம் பட்டு நெசவாலையில் 30 பணியாளர்களைக் கொண்டு, 4780 மணிநேரம் வேலை செய்து, 7 மாதத்தில், 8 கிலோ எடையுள்ள பட்டுப்புடவையை தயாரித்தனர். எதற்கு என்கிரீர்களா? கணவன்மார்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளத்தான். அதில் அப்படி என்ன விசேஷம்.

தங்கம் - 59.கிராம் 700 மி. கிராம்.
வைரம் - 3 காரட் 913 சென்ட்.
பிளாட்டினம் - 120 மி. கிராம்.
வெள்ளி - 5 கிராம்.
மாணிக்கம் - 2காரட் 985 சென்ட்.
மரகதம் - 55 சென்ட்.
கனக புஷ்பராகம் - 3 சென்ட்.
நீலக்கல் - 5 காரட்.
வைடூரியம் - 14 சென்ட்.
புஷ்பராகம் - 10 சென்ட்.
பவளம் - 400 மி. கிராம்.
முத்து - 2 கிராம்.

என நவரத்தினங்களோடு தங்கம், வெள்ளி, பிளாட்டினம் சேர்த்து கஷ்ட"பட்டு" தயாரித்திருந்தனர். சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த புடவையின் முத்தணையில் ரவிவர்மாவின் புகழ்பெற்ற "Galaxy of Musician" ஓவியம் வரையப்பட்டிருந்தது. 2008 ஆண்டு இந்த புடவையை கின்னஸ் வேல்டு ரெக்கார்டில் உலகின் விலை உயர்ந்த புடைவை என பதிவு செய்தனர். இதுவே உலகின் விலையுயர்ந்த புடவையாகும். அப்படி என்ன? பெரிய புடலங்காய் விலை என்றால், வெறும் 3931627 மட்டுமே. என்ன? மூச்சு வாங்குகிறதா.


185carat jacob diamond


மோதிரம் எந்த விரலில் அணியலாம்?

மோதிரம் எந்த விரலில் அணியலாம்:
மோதிரம்அணிந்திருக்கும் பெண்களும் , ஆண்களும்,
கை தான் வீட்டில், குடும்பத்தில் ஓங்கியிருக்க
வேண்டும், செல்வாக்குடன் விளங்க வேண்டும்.

மோதிரம் எந்த கையில், எந்த விரலில் அணிந்தால் நல்லது என்பதற்கு, நம் முன்னோர், சில, பல காரணங்களையும், ஆய்வாளர்கள் பல, சில காரணங்களையும் கண்டுபிடித்து, கடைபிடிக்க சொல்லியுள்ளனர்.

நம்முடைய நான்காவது விரலில் தான், மோதிரம் அணிய வேண்டும்.

அதற்கு பெயரே, மோதிர விரல் தான்.

 நம் ஐந்து விரல்களுமே, நம் ஐந்து சொந்தபந்தங்களை குறிக்கின்றன.

சுண்டு விரல்: நம் பிள்ளைகளை

மோதிர விரல்: வாழ்க்கை துணையை

நடு விரல்: நம்மையே குறிக்கும்.

ஆள்காட்டி விரல்: நம் சகோதரர்களை

பெரு விரல்: பெற்றோரை

சுண்டு விரலில்: மோதிரம் அணிவது வழக்கத்தில் இல்லை. அணிந்தாலும் இதய சக்தி ஓட்டம் தடைப்படும்.

மோதிர விரலில்: ஒவ்வொருவரும்,
கண்டிப்பாக ஒரு வளையமாவது அணிந்திருக்க வேண்டும்.

இதய நோய், வயிற்றுக் கோளாறுகளை தடை செய்யும். இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கும்.

நடு விரலில்: பெரும்பாலானவர்கள் மோதிரம் அணிவதில்லை.

முன்பெல்லாம் நபர்களின் முகத்தை வைத்து, குணாதிசயங்களையும்; நடை, உடை பாவனைகளை வைத்து குணத்தையும்; உடம்பில் உள்ள மச்சத்தை வைத்து, சாமுத்திரிகா லட்சணத்தையும் குறிப்பிட்டுச் சொல்வது வழக்கம்.

தற்போது கை விரல்களையும், அதில் அணியும் மோதிரங்களையும் வைத்தும், ஆராய்ச்சி செய்து நபர்களின் குணாதிசயங்களை கூற முடியும் எனக் கூறப்படுகிறது.

நம் நாட்டு கலாசாரப்படி, மோதிரம் மாற்றிக் கொள்வது நிச்சயம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத்தானே தவிர, அதுவே திருமணம் முடிந்ததற்கு
அத்தாட்சி கிடையாது.

ஆள்காட்டி விரலே சிறந்தது.

மாணிக்கம், முத்து, கோமேதகம், மரகதம், வைரம், வைடூரியம், பவளம் என, இத்தனை அதிர்ஷ்ட கற்களையும் தங்கம் மற்றும் வெள்ளி உலோகத்தில் பதித்து, மோதிரமாக, பெண்கள், இடது கை மோதிர விரலிலும், ஆண்கள் வலது கை மோதிர விரலிலும் அணிவது, உடம்புக்கு நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி, நல்லது நடக்கும்படியாக நம்
செயல்பாட்டினை வைத்திருக்கும் என்பது
காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது.

புஷ்பராகம், கனக புஷ்பராகம் கற்கள் பதித்த வெள்ளி மோதிரம், ஆள்காட்டி விரலிலும், நீலம் கற்களை பதித்த வெள்ளி, பிளாட்டினம் மோதிரத்தை நடு விரலிலும், வைடூரியம் பதித்த வெள்ளி மோதிரத்தை, சுண்டு விரலிலும் அணிகிற வழக்கமும், இப்போது பரவியுள்ளது.

உடம்பில் எந்த நகையாக இருந்தாலும், இந்துக்கள் தங்கத்தில் அணியவே விரும்புகின்றனர்.

இந்தியா, இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில், வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, தங்கம் ஏற்றது என்பது ஒரு காரணம் என வைத்துக் கொண்டாலும், தங்கம் எப்போதும் நம் உடலை தொட்டுக் கொண்டிருப்பதால், நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் என்ற
நம்பிக்கையும் நம் பெண்களிடம் உள்ளது.

நீள விரலின் மகிமை
ஆள் காட்டி விரலை விட, மோதிர விரல் நீளமாக இருந்தால், 'ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ்' என்ற மூட்டு பாதிப்புகள் வரும் சாத்தியக்கூறு அதிகம்.

மோதிர விரலின் நீளம், அளவை வைத்து, இதயநோய், புற்று நோய், சளித்தொல்லை போன்ற நோய்கள் உள்ளனவா என்று தெரிந்து, முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள முடியும்.

ஆள்காட்டி விரல், மோதிர விரல், இரண்டுக்கும் உள்ள உயரம், இடை வெளியின் விகிதம் வைத்து, பாலின ஹார்மோன்களை கூட, கணக்கிட்டு கூறமுடியும்
என்கிறது ஜெனிவா பல்கலைக் கழகம்.

ஆண்மையின் அடையாளத்தை
நிர்ணயிக்கும், 'டெஸ்டோஸ்டிரோன்' என்ற ஹார்மோன் அளவு மிகுந்தால், மோதிர விரல் நீளமாகவும், பெண்மையை நிர்ணயிக்கும், ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகம் இருந்தால், ஆள்காட்டி விரல் நீளமாகவும் இருக்குமாம்.

பொதுவாக ஆள்காட்டி விரலை விட, மோதிர விரல், நீளமாக உள்ள ஆண்களைத் தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.

மோதிரம் விரலில், மோதிரம் அழுத்தும்
இடத்திலிருந்து, நரம்பு நேரிடையாக
இதயத்தை போய் சேர்கிறது.

ஐரோப்பிய நாடுகளில், திருமணத்திற்கு முன், இடது கை விரலில் போட்டிருக்கும் மோதிரம், திருமணத்திற்கு பின், வலது கை விரலுக்கு மாற்றப்படுமாம்.

மோதிர விரல் என, பெயர் சூட்டப்பட்டுள்ள நம் கையின் நான்காவது விரலில், திருமணத்தின் போது கண்டிப்பாக மோதிரம் போட வேண்டும். இது, வரதட்சணையாக மாமியார் போட்டாலும் சரி; நமக்கு நாமே போட்டுக் கொண்டாலும் சரி. நம் இல்லற வாழ்க்கையின் அஸ்திவாரமே, நான்காவது விரலில் தான் உள்ளது.

ஆண், பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. நான்காவது விரலில் தான், திருமண மோதிரம் போட வேண்டும்
என்பதற்கு, ஒரு நம்பிக்கை கதை உண்டு.

விரல்களை பிரித்தால்...
இரு உள்ளங்கைகளையும், நேருக்கு நேராக இருக்கச் செய்யுங்கள்.

நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள். ஏனைய விரல்களை நிமிர்த்து ஒட்ட வையுங்கள்.

இப்போது பெருவிரலை பிரித்துப் பாருங்கள் சுலபமாக பிரிக்க முடியும்.

அதாவது உங்கள் பெற்றோர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின், உங்களுடன் இருக்க மாட்டார்கள் என்று அர்த்தம். பெரு விரலை திரும்ப ஒட்ட வைத்துவிட்டு, ஆள்காட்டி விரலை பிரியுங்கள்.

உங்களின் சகோதரர்கள், உங்களுடனேயே இருப்பர் என சொல்ல முடியாது என்று பொருள்.

சுண்டு விரலும், இதே மாதிரி எளிதாக பிரியும். உங்கள் பிள்ளைகளும்
உங்களுடனேயே இருப்பர் என நம்ப முடியாது
என்பதாக அர்த்தம்.

கடைசியாக, மோதிர விரலை இதே மாதிரி பிரிக்க முயலுங்கள்... கொஞ்சம் கடினம்; உடனே பிரிக்க இயலாது. இதே போல், கணவன், மனைவி எப்போதும் ஒன்றாக  பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, திருமண சடங்குகளில் மோதிரம் அணிவிக்கப்படுகிறது.
 வாழ்க வளமுடன்........
மனிதனின் உடல் பஞ்சபூத சக்திகளால் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே .

நம்உடலில் உள்ள ஏழு சக்கரங்கள் தான் நம்மை இயக்குகிறது.நம் உடல் ஆதீத சக்தி பெறவும், ஆரோக்கியமும், சிந்தனையும்,ஞாணமும் பெருக வேண்டும் என்றால், நம் உடலில் உள்ள சக்கரங்களை அதிர்வுகள் மூலம் தான் இ்யக்க முடியும்.

அதனால் தான் அதிர்வுகளை உண்டு பண்ணும் அதிர்ஷ்ட்ட இராசிகற்களை நம் முன்னோர்களான அரசர்களும், ஞானிகளும், சித்தர்களும் பயன் படுத்தி அவர்கள் நினைத்த காரியத்தை சாதித்து உள்ளனர்.

தரமான இராசி கற்கள் தான் உடலுக்கு அதிர்வுகளை உண்டு பண்ணி பஞ்சபூத கதிர்களின் சக்தி நரம்பு மூலமாக அதிர்வுகளை செய்து உடலை பல படுத்துகிறது.

உங்கள் ஜாதகத்தில் சுபங்கள் தரக்கூடிய கிரகத்தை கணித்து, சுபங்களை அதிகரிக்க செய்யும் போது உங்கள் வாழ்க்கையில் சுப நிகழ்ச்சிகள் என்று சொல்ல கூடிய நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும்.

காரிய தடைகளை சரி செய்யது .நல்ல திருமண வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம். நோய் நொடிகளையும் குணப்படுத்தி கொள்ள முடியும்.

Sunday 17 February 2019

பசுவின் கோமியத்தில் தங்கமா!

பசுவின் கோமியத்தில் தங்கம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
காந்திநகர்:  பசுவின் கோமியத்தில் இருந்து தங்கம் கிடைப்பதாக குஜராத் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஜுனாகாத் வேளாண் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து  குஜராத்தின் பசு இனமான' கிர்' மாட்டைக் கொண்டு கடந்த  4 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வந்தனர். இதில் 400 பசு மாடுகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 1 லிட்டர் சிறுநீரில்  3 முதல்10 மி.கி  வரை தங்கம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  மாட்டின் வயதைப் பொறுத்து  தங்கம் கிடைக்கும் அளவு மாறுபடுகிறது.  ஆனாலும் அனைத்து வகை கிர் இன பசு மாடுகளின் சிறுநீரிலும் தங்கம் நிச்சயம் இருக்கிறதாம்.
மாலை நேரத்தை விட காலை நேர மாட்டு கோமியத்தில்தான் தங்கம் அதிகளவு கலந்துள்ளதாம்.  வெள்ளி, துத்தநாகம், போரான் உள்ளிட்ட தனிமங்களும் பசு கோமியத்தில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பசுவின்  கோமியத்தில் 5,100 வகையான பொருட்கள் உள்ளதைக் கண்டறிந்துள்ளனர். அதில் 388 பொருட்கள் மருத்துவ இயல்பு கொண்டவை. குஜராத்தில் தற்போது வெறும் 3,000 கிர் வகை பசுமாடுகள் மட்டுமே உள்ளன.'பஞ்ச கவ்யம்'  எனப்படும் பசு சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய 5 பொருட்களால் செய்யப்படும் கலவையானது  இயற்கை உரமாகக் கருதப்படுகிறது.  பசு சாணத்தில் பாக்டீரியா,  நுண் சத்துகள் அடங்கியுள்ளது.  கோமியத்தில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்து இருக்கிறது.  பாலில்  புரதம், கொழுப்பு, மாவு, அமினோ அமிலம், கால்சியம் சத்துக்கள் உள்ளன. தயிர்,  செரிமானத் தன்மையை அதிகரிக்க கூடியது.  நெய்யில்  வைட்டமின் ஏ, பி, கால்சியம், கொழுப்புச் சத்து நிறைந்தது.

வெள்ளி, துத்தநாகம், போரான் உள்ளிட்ட தனிமங்களும் பசு கோமியத்தில் உள்ளதாக ஆய்வறிஞர்கள் தெரிவிக்கின்றனர். பசு கோமியத்தில் 5,100 வகையான பொருட்கள் உள்ளதை கண்டறிந்துள்ள ஆய்வறிஞர்கள், அதில் 388 பொருட்கள் மருத்துவ பண்பு கொண்டவை என்றும் தெரிவித்துள்ளனர். முன்னதாக, மனிதனின் சிறுநீரில் 3,000-க்கும் அதிகமான பொருட்கள் உள்ளதனை விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எரிமலைக்கு அடியில் தங்கமா!


நியூசிலாந்து எரிமலைகளுக்கு அடியில் தாறுமாறாக புதைந்து கிடக்கும் தங்கம், வெள்ளி!

 நியூசிலாந்து எரிமலைகளுக்கு அடியில் தாறுமாறாக புதைந்து கிடக்கும் தங்கம், வெள்ளி!
உறுதியானது...

ஏற்கனவே இப்பகுதியில் தங்கம் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், அது தற்போது ஆராய்ச்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயினும் எவ்வளவு தங்கம் அங்கு இருக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக கூற இயலவில்லை.

கைக்கு எட்டியது....வாய்க்கு எட்டவில்லை

அதோடு இந்த தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களை வெளியிலும் எடுக்க இயலாத சூழல் உள்ளது. காரணம் எரிமலைகளின் அடியில் இருக்கும் நீர்த்தேக்கங்களில் அதன் கீழ் அடுக்குகளில் உள்ள வெப்பம் ஆகும்.

புதிய உபகரணம்...

ஆயினும் எதிர்காலத்தில் இதற்கென ஒரு சரியான உபகரணம் தயார் செய்தால் ஆண்டுக்கு, 680 முதல் 7500 கிலோ கிராமுக்கு தங்கம் இங்கிருந்து எடுக்க முடியும் என்கின்றனர் புவியியல் வல்லுநர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

விலைமதிப்பில்லாத உலோகங்கள்...

இது போன்று எரிமலையின் அடிப்பகுதியில் பூமியின் கீழ் அடுக்கில் உள்ள வெப்பத்தால் பல்லாண்டுகளாக, இதுபோன்ற விலைமதிப்பில்லாத உலோகங்கள் சேர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


Friday 15 February 2019

யூகலிப்டஸ் இலையில் தங்கமா!

யூகலிப்டஸ் இலையில் தங்கம்

 யூகலிப்டஸ் மரத்தின் இலையில் தங்கத் துகள் படிந்திருப்பதை ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கல்கூர்லி என்ற பகுதி தாது வளம் நிறைந்த பகுதி. இங்கு தங்கம் அதிக அளவில் இருப்பதாக 1800ம் ஆண்டுகளிலே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். மண் வளத்துக்கும், அங்குள்ள தாவரங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து இவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

கல்கூர்லி பகுதியில் உள்ள யூகலிப்டஸ் மரத்தின் இலைகளை அதிநவீன எக்ஸரே கருவி மூலம் படம் பிடித்து பார்த்தபோது, அதில் மிக நுண்ணிய அளவில், அதாவது தலைமுடியின் அகலத்தில் 5ல் 1 பங்கு அளவுக்கு தங்க துகள் படிந்திருந்ததை கண்டு பிடித்தனர். இது குறித்து புவிவேதியியல் நிபுணர் மெல் லிண்டர்ன் கூறுகையில், ‘‘யூகலிப்டஸ் மரத்தின் வேர்கள் தரையில் 100 அடி ஆழம் வரை ஊடுருவி தங்கத் துகள் அடங்கிய நீரை உறிஞ்சுகின்றன. தங்கத் துகள் இலைகள் மற்றும் பக்க கிளைகளுக்கு கடத்தப்படுகின்றன. அவை பின்னர் காய்ந்து உதிர்ந்து விடுவதால், மரத்துக்கு பாதிப்பில்லை’’ என்றார்.

இந்த ஆராய்ச்சி கட்டுரை ‘நேச்சர் கம்யூனிகேஷன்’ என்ற ஆய்வு இதழில் வெளியிடப்பட்டு ள்ளது. இதன் மூலம் பூமிக்கு அடியில் உள்ள தாது வளங்களை தோண்டி பார்க்காமலேயே, அங்குள்ள தாவரங்களின் மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் கண்டுபிடித்துவிடலாம் என்பதை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியில் பொதிந்துள்ள தாமிரம் மற்றும் துத்தநாகம் போன்ற வளங்க ளையும் இதே முறையில் அங்குள்ள தாவரங்களை ஆராய்வதின் மூலம் கண்டுபிடித்துவிடலாம் என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். யூகலிப்டஸ் தங்கம் காய்க்கும் மரங்களா என்று ஆஸி. விஞ்ஞானிகளிடம் கேட்டால், 500 மரங்களை அழித்தால்தான், சிறிய மோதிரம் செய்யும் அளவுக்கு தங்கம் கிடைக்கும் என்கின்றனர்.

எக்ஸ்ட்ரா தகவல்

பூமியிலிருந்து இதுவரை 1 லட்சத்து 74 ஆயிரம் டன் தங்கம் எடுக்கப்பட்டுள்ளதாம். உலக தங்க கவுன்சில் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

Saturday 9 February 2019

கண்ணாடி மோதிரம் வைரமா?லன்டன் பெண்மனி அதிர்ச்சி68கோடி


 ''வாங்கும் போது ரூ.920, விற்கும் போது ரூ.6.8 கோடி'': இன்ப அதிர்ச்சியில் லண்டன் பெண்மணி
:எங்கேனும் வெளியே சென்றால் நமக்கு பிடித்த எதையாவது வாங்கி வந்துவிடுவோம். அந்த பொருள் நமக்கு எந்த அளவுக்கு பயன்படும்? அதன் தேவை என்ன? என்றெல்லாம் யோசிப்பதில்லை. குறிப்பாக பெண்கள், சாலைகளில் விற்கும் விலை குறைவான கல் மோதிரங்கள், மணி வகைகள் என வாங்கி குவித்து விடுவார்கள். ஆனால் அப்பொருட்களின் தேவை எப்போதாவது தான் இருக்கும். அப்போது தான் அதனை பயன்படுத்துவார்கள். சில பொருட்கள் பயன்படுத்தாமல் அப்படியேவும் கிடக்கும். இதே போல் விளையாட்டாக வாங்கிய ஒரு கண்ணாடி மோதிரத்தால் லண்டன் பெண்மணி ஒருவர் தற்போது கோடீஸ்வரி ஆகியுள்ளார். டெப்ரா காடார்ட் என்ற 55 வயதான பெண்மணி லண்டனில் வசித்து வருகிறார். அவர் 33 வருடங்களுக்கு முன்பு கண்ணாடி மோதிரம் ஒன்றை ஏலம் மாதிரியான விற்பனையின் போது வாங்கியுள்ளார்.
இந்திய மதிப்பில் வெறும் 920 ரூபாய்க்கு வாங்கிய அவர் சிலமுறை பயன்படுத்திவிட்டு அப்படியே வைத்துவிட்டார். தற்போது அவருக்கு பணத்தேவை ஏற்பட, தன்னிடம் உள்ள கல் மற்றும் கண்ணாடி மோதிரங்களை விற்கலாம் என்று யோசித்துள்ளார்.
கண்ணாடி மோதிரத்தை நகைக்கடைக்கு கொண்டு சென்ற டெப்ராவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த மோதிரத்தை வாங்கிய நகைக்கடைக்காரர்கள் இந்த மோதிரம் வைரத்தால் ஆனது என்றும் இதன் மதிப்பு இந்திய மதிப்பில் 6.8 கோடி என்றும் தெரிவித்துள்ளனர். இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன டெப்ரா, அந்த வைர மோதிரத்தை ஏலமிட திட்டமிட்டுள்ளார்.